சந்தேக நபர்கள், தவறான வழித்தடங்கள்
காயத்ரி சம்பவத்திற்குப் பிறகு, கோயம்புத்தூர் போலீஸ் துறை முழுவதும் அதிக கவனத்துடன் இயங்கத் தொடங்கியது. அடுத்த உயிர் காயத்ரி என்று தெரிந்தவுடன், இன்ஸ்பெக்டர் அனிதா தன் குழுவை முழுமையாக களமிறக்கினார்.
காயத்ரிக்கு பாதுகாப்பு
ஆனால், காயத்ரியின் முகத்தில் ஒரு விசித்திரமான சிரிப்பு இருந்தது. அது ஒருவிதமாக “என்னைப் பாதுகாத்தாலும் பயனில்லை” என்று சொல்வது போல.
முதல் சந்தேக நபர் – லோட்ஜ் உரிமையாளர்
“இந்த அறைகளை யாருக்கு வாடகைக்கு கொடுக்கிறீங்க? அடையாள அட்டைகள் எல்லாம் சரிபார்க்கிறீங்களா?”
அனிதா கண்ணைக் குறித்தாள். “யாரு அந்த நண்பர்கள்? CCTV இருக்கா?”
சாமி தயக்கத்துடன் சொன்னான்: “கேமரா பழையது, வேலை செய்யல.”
அனிதாவின் கோபம் மேலெழுந்தது. ஆனால் மதிவாணன் சிரித்து, “இவனிடம் உண்மையிலேயே எதுவும் இருக்காது. நம்ம நேரத்தை வீணடிக்கிறான். ஆனா இன்னும் கவனிக்கணும்,” என்றார்.
தவறான தடம் – பேராசிரியர்
அடுத்த விசாரணை – கல்லூரி மாணவ, மாணவிகளின் சூழல். காயத்ரி படிக்கும் கல்லூரியில், மனநல பாடம் கற்பிக்கும் பேராசிரியர் பிரகாஷ் பற்றிப் பலர் சந்தேகப்பட்டனர்.
அவர் எப்போதும் மாணவர்களுடன் தனியாக அதிகமாக பேசுவார். மாணவர்கள் மனச்சோர்வு அடைந்தால், அவர்களிடம் நெருக்கம் கொள்வார். பலருக்கு அவர் மரியாதைக்குரியவராய் இருந்தாலும், சிலர் அவரைப் பற்றி இரகசியமாக “அவர் சில மாணவர்களிடம் அதிக ஈடுபாடு காட்டுகிறார்” என்று குறைசொன்னனர்.
பிரகாஷ் அதிர்ச்சியடைந்தார். “அது என்ன கேள்வி மேடம்! நான் மனவியல் பேராசிரியர். எனது கடமை மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுதல். நான் எந்த விதத்திலும் தவறாக நடக்கவில்லை.”
மதிவாணன் அவனை நேராகக் கவனித்தார். கண்களில் அச்சம் இல்லை. “இவனிடம் உண்மையிலேயே குற்றம் இல்லாம இருக்கலாம்,” என்று அனிதாவிடம் மெதுவாகச் சொன்னார்.
ஆனால் அனிதா இன்னும் சந்தேகத்தில் இருந்தாள். “சில நேரம் உண்மையான குற்றவாளி, மிகுந்த தூய்மையான முகமூடி அணிவான். அவனை விட்டுவிட முடியாது.”
மர்மமான தொலைபேசி எண்
அனிதா ஆர்வமாகக் கேட்டாள்: “அந்த எண் யாருக்கு சொந்தம்?”
விஜயகுமார் சிரித்தார். “அது தான் சிக்கல். அந்த எண் சில நேரம் வேறு வேறு address-களில் register செய்யப்பட்டிருக்கு. அதுவே நம்மைத் தவறான வழியில் இழுத்துச் செல்கிறது.”
மதிவாணன் சிந்தனையுடன், “அப்படின்னா அந்த சைக்கோ, தொழில்நுட்பத்தில் நல்ல அறிவு உடையவன். எல்லா தடங்களையும் தவறாகக் காட்டுகிறான்.”
காயத்ரியின் தப்பிச் செல்லும் முயற்சி
ஒரு மாலை, காவலர் முகாமில் இருந்த காயத்ரி திடீரென காணாமல் போனாள். கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அனிதா அதிர்ச்சியில். “எப்படி அவள் வெளியேறினாள்? காவலர்கள் இருந்தார்களே?”
ஒரு காவலர் நடுங்கிய குரலில் சொன்னார்: “மேடம், அவள் அப்படியே வந்து சொன்னாள் – ‘என்னை என் நண்பன் அழைக்கிறார், அவன் தான் என்னைக் காப்பாற்றுவான்’. அவளது முகம்… அது ஒரு மயக்கத்தில் இருந்த மாதிரி.”
மதிவாணன் உடனே சொன்னார்: “இது சைக்கோவின் வேலை. அவன் நேரடியாக அவளைப் பாதித்திருப்பான். அவளை இப்போதே தேடணும்.”
தப்பான குறியீடு
ரயில்வே நிலையத்தில் விசாரணை மேற்கொண்டபோது, ஒரு பெரிய ஆள் – சிவப்புக் கோட் அணிந்தவர் – அவளைப் பார்த்ததாக சிலர் சொன்னார்கள். ஆனால் அந்த CCTV காட்சிகள், அந்த நேரத்தில், “maintenance” காரணமாக வேலை செய்யவில்லை.
அனிதா பற்களைக் கடித்தாள். “மீண்டும் நம்மை ஏமாத்திட்டான்.”
இருளில் ஒரு குறிப்பு
அந்த இரவு, அனிதாவின் அலுவலகத்தில் ஒரு சின்ன கவர் வந்தது. அதில் ஒரு காகிதம் – சிவப்பு மைபோட்டு எழுதப்பட்டிருந்தது:
“Inspector… காயத்ரியை காப்பாற்ற நினைக்காதே. அவள் ஏற்கனவே என்னோடவர். உங்க தடவைகள் எல்லாம் தவறான வழித்தடங்கள்தான்.”
புதிய சந்தேகம்
அடுத்த நாள், காயத்ரியின் கைபேசி signal Erode பக்கம் trace ஆனது. அதாவது, அவள் இன்னும் உயிருடன் இருந்தாள்.
0 Comments