சுவடுகள் தேடும் தொடக்கம்
விசாரணைக் குழு அமைத்தல்
அந்த மறுநாள் காலை, அனிதா தன்னுடைய அலுவலகத்தில் ஒரு சிறப்பு கூட்டம் வைத்தாள். கான்ஸ்டபிள் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமன், மேலும் இரண்டு இளம் அதிகாரிகள் – அனைவரும் அவள் மேசை முன் நிற்கின்றனர்.
“நம்ம முன்னால இருக்கிற கேஸ்ல ஒரு பிழையும் பண்ணக் கூடாது. ஒவ்வொரு விவரமும் உயிர் தாங்கிக்கிடக்குது,” என்று தொடங்கினாள் அனிதா.
மதிவாணன் சிரித்துக் கொண்டு, “நான் அதிகாரப்பூர்வ போலீஸ் இல்ல. ஆனா உங்க குழுவோட சேர்ந்து இந்த சிக்கலை சிதறடிக்க ரெடி,” என்றார்.
அனைவரும் தலையசைத்தனர்.
டிஜிட்டல் தடம்
முதல் வேலை – அந்த மாணவ, மாணவிகளின் மொபைல் போன்களை மீளாய்வு செய்வது. சைபர் செல் அதிகாரி விஜயகுமார், அனிதாவின் குழுவில் இணைக்கப்பட்டார்.
அனிதா உடனே ஆர்வமாக முன்வந்தாள். “அந்த page யாரு நடத்துறாங்க? Details trace பண்ண முடியலையா?”
விஜயகுமார் தட்டச்சு செய்தார். “போஸ்ட் எல்லாமே anonymous ID-லிருந்து வருது. ஆனால் backend log-ல சில IP address-கள் கிடைச்சிருக்கு. அதில் மூன்றும் கோயம்புத்தூருக்குள்ள இருந்துருக்கு.”
மதிவாணன் சிரித்து, “நம்ம வலை விரிக்க ஆரம்பிச்சாச்சு,” என்றார்.
மர்மமான பதிவுகள்
அந்த page-ஐ திறந்தபோது, அங்கே இருந்த எழுத்துக்கள் வாசிப்பவர்களின் உள்ளத்தையே நெருடும் விதத்தில் இருந்தது –
அனிதா சினத்துடன் சொன்னாள்: “இது வழக்கமான குண்டாகிய கவிதை இல்ல. நேரடியாக மரணத்தை தூண்டுது. இந்தக் கணக்கு பின்புலத்தில் இருக்கும் ஒருவன் தான் நமக்கு தேவை.”
மதிவாணன் அவளை நோக்கி: “ஆனா ஒரு விஷயம் கவனிச்சீங்களா? இந்த பதிவுகளுக்கு நிறைய comment-கள் வருது. அதில் சில account-கள் fake போல தெரிகுது. அந்த fake account-கள் victims-ஐ approach பண்ணி இருக்கக்கூடும்.”
“சரி, அந்த fake ID-களை trace பண்ணுங்க,” என்று அனிதா உத்தரவு விட்டாள்.
முதல் தடம் – “Aravind”
அடுத்த இரண்டு நாட்களில், சைபர் செல் குழு ஒரு பெயரைப் பிடித்தது – “Aravind_92”. இந்த account victims-ோட chat-களில் அடிக்கடி இருந்தது. மெதுவாக அவர்களோடு நெருக்கம் கொள்வது, அவர்களுடைய துயரங்களை கேட்பது, பின்னர் மனச்சோர்வை தூண்டுவது – இப்படிப் புழுதி போட்டு பிடித்தது.
அந்த account trace செய்தபோது, முகவரி வந்தது – சின்னப்பாலயத்தில் இருக்கும் ஒரு சிறிய வீடு.
அனிதா, மதிவாணன், பழனிவேல் ஆகியோர் உடனே அந்த இடத்திற்கு சென்றனர்.
அவளது குரலில் ஒரு இயல்பான சோகமுண்டு. அவள் அறையில் இருந்த படத்தை pointing பண்ணினாள் – கண்ணாடி அணிந்த ஒரு இளைஞன் சிரித்துக் கொண்டிருக்கும் படம்.
மதிவாணன் சும்மா அறையை உற்றுப் பார்த்தார். கம்ப்யூட்டர் டேபிள் காலியாக இருந்தது. எந்தக் கிளூக்களும் இல்லை.
அவள் உறுதியாகச் சொன்னாள்: “அவன் எப்போதுமே நல்ல பையன். இப்படி ஏதாவது செய்வான் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.”
அனிதா புன்னகையுடன் தலைஅசைத்தாள். “சரி, நாங்கள் விசாரணை பண்ணிக்கறோம். கவலைப்படாதீங்க.”
அனிதா சிந்தனையுடன், “அப்படின்னா அந்த சைக்கோவுக்கு நம்ம முன்னாடியே fake identity create பண்ணுற திறமை இருக்கு,” என்றாள்.
இரவில் அச்சமூட்டும் அழைப்பு
அந்த இரவு, இன்ஸ்பெக்டர் அனிதாவின் அலுவலகத்தில் தொலைபேசி மணி அடித்தது. அவள் ரிசீவரை எடுத்தவுடன், ஒரு கரகரப்பான குரல் கேட்டது.
“Inspector Anita... நீங்க எவ்வளவு தேடினாலும், என்னை பிடிக்க முடியாது. நான் உங்க முன்னாலயே இருக்கேன். இன்னும் பல உயிர்கள் போகும். நிறுத்த முடியுமா?”
அனிதாவின் இரத்தம் கொதித்தது. “யாரு நீ? உன் விளையாட்டை உடனே நிறுத்து! இல்லேன்னா உன்னை நானே தேடி பிடிச்சு கிழிச்சு தூக்குவேன்.”
அந்த குரல் சிரித்தது. “எனக்குப் புரியுது – நீங்க தான் ரொம்ப கடினமானவள். ஆனா உங்களுக்கு தெரிஞ்சா அதிர்ச்சி அடைவீங்க – அடுத்த உயிர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுடுச்சு.”
தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
மதிவாணனின் பகிர்வு
அனிதா தலையசைத்தாள். “அப்போ அந்தக் கல்லூரி, விடுதி, counselling centre எல்லாத்திலிருந்தும் data வாங்கணும். யாரெல்லாம் depression-ல இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும்.”
புதிய சந்தேகம்
அடுத்த நாள், அந்தக் கல்லூரி விடுதியில் இருந்த ஒரே ஒரு மாணவி – காயத்ரி – அவளது நடத்தை எல்லோருக்கும் வித்தியாசமாகத் தோன்றியது. சில நாட்களாக அவள் எதையும் பேசாமல் தனிமையில் இருந்தாள். அடுத்தவர்களுடன் பேசும் பழக்கம் இல்லாமல், social media-வில் தொடர்ந்து ‘Dark Emotions’ பக்கத்தில் post-களை like செய்து வந்தாள்.
மதிவாணன் மற்றும் அனிதா அவளை தனியாக சந்தித்தனர்.
“காயத்ரி, உன் நண்பர்கள் எல்லாரும் உன்னைப் பற்றி கவலைப்படுறாங்க. நீ சும்மா சோகம் அடைந்து இருக்கிறாய் போல,” என்றார் மதிவாணன் மென்மையாக.
அனிதா உடனே அதிர்ச்சியடைந்தாள். “அவன் பெயர் என்ன?”
ஆனால் காயத்ரியின் முகத்தில் இருந்த சிரிப்பு, அது ஒரு சாதாரண சிரிப்பு அல்ல – அதில் இருந்தது மனசு முழுக்க ஆளாக்கப்பட்ட ஒருவரின் சிரிப்பு.
0 Comments